மீள் கவுஜ

மீள் கவுஜ
காத்திருந்தேன் உனக்காக
காதலுடன் வருவாயென
கால்கடுக்க நின்றிருந்தும்
காணவில்லை உன்னை

உனக்காக ஒரு ரோசா
வைத்திருந்தேன் வாடியது
எழுதிவைத்த கவிதையெல்லாம்
எங்கேயோ ஓடியது

எங்கே போனாயென
ஏங்கி இருந்தபோது
ஏக்கம் தீர்க்கவந்தாய்
என்னிடம் நீ கண்ணே!

வாடிய ரோசாவை
வாசமுடன் நான் நீட்ட
வைத்திருந்த ரோசாவை
வான் நோக்கி நீ எறிய
வானரப்படையாக நான்மாறி
அதை பிடிக்க

வழக்கம்போல் வீசினாயே
வசந்தப் புன்னகையை
அதைப்பிடிக்க என்னால்
இயலவில்லை கண்ணே

நீ பேசுவாயென
நான் மவுனிக்க
நான் பேசுவேனென
நீ மவுனிக்க
இருளும் மவுனமும்
இறுகிக் கொண்டிருந்தது

எனக்காக நீபேச
உதடுபிரிக்க
உனக்காக நான்பேச
உதடுபிரிக்க

எழுந்திருடா
மணியேழு
என்றான்
என் அறைத்தோழன்

சவுரியத்துக்கு எழுதுவியாடா மயிரானே (அ) வேறு மழை

சவுரியத்துக்கு எழுதுவியாடா மயிரானே
(அ) வேறு மழை
- ஆதவன் தீட்சன்யாவின் கவிதை

மிஞ்சிப்போனா என்ன
சொல்லிற முடியும் உன்னால
இந்த மழையைப் பத்தி

ஓதமேறுன கொட்டாய்ல
கோணில மொடங்கியும்
குளுர்ல நடுங்கியிருக்கியா

உங்கூட்டுப் பொண்டுக
நமுத்த சுள்ளியோட சேந்தெரிஞ்சு
கஞ்சிக் காய்ச்சியிருக்காங்களா
கண்ணுத்தண்ணி உப்பு கரிக்க

ஈரஞ்சேராம எளப்பு நோவெடுத்து
செத்த சொந்தத்த எடுக்க வக்கத்து
பொணத்தோட ராப்பகலா
பொழங்கித் தவிச்சதுண்டா

ஒழவுமாடொன்னு கோமாரியில நட்டுக்க
ஒத்தமாட்டைக் கட்டிக்கிட்டு
உயிர்ப் பதற அழுதிருக்கா உங்குடும்பம்

எதுக்கும் ஏலாம
உஞ்செல்லப்புள்ளையோட
சிறுவாட்டக் களவாண்டு
சீவனம் கழிஞ்சிருக்கா

தங்கறதுக்கு வூடும்
திங்கறதுக்கு சோறுமிருந்துட்டா
சவுரியத்துக்கு எழுதுவியாடா மயிரானே
ஒண்ணு தெரிஞ்சுக்கோ
மழை ஜன்னலுக்கு வெளியதான்
எப்பவும் பெய்யுது உனக்கு
எங்களுக்கு எங்க பொழப்பு மேலயே.
--
ஆதவன் தீட்சண்யா கவிதை

சோதனை

சோதனை

ரேடியோ திரட்டி - இது செம தூளு

ரேடியோ அனேகமாக 30 வயதுக்கு முற்பட்டவர்கள் பெரும்பாலும் ரேடியோவில் பொழுதை கழித்திருக்க வாய்ப்புண்டு, கம்பி வட தொலைக்காட்சிகளுக்கு பின் கிட்டத்தட்ட மறைந்து போன வானொலியை மீண்டும் கொண்டு வந்தது எஃப்.எம்.

உலக அளவில் தமிழில் நிறைய எஃப்.எம். வானொலிகள் உண்டு, அவைகளை தொகுத்து தந்திருக்கிறார் திரட்டி.காம் வெங்கடேஷ்...

அழகான தள வடிவமைப்பு, நிறைய எஃப்.எம். வானொலிகளை இணைத்து அட்டகாசமாக செய்திருக்கிறார்...



இது செம தூளு ... நீங்களும் கேட்டு பாருங்களேன் திரட்டி ரேடியோ

மக்களின் வயிற்றில் மண் அள்ளி போட்ட அதிமுக,பாமக, மதிமுக

இடைத்தேர்தல் என்றாலே சாதாரணமாகவே கொஞ்சம் கூடுதல் கவனிப்பு இருக்கும், திருமங்கலம் இடைத்தேர்தலும் அதைத் தொடர்ந்து நடந்த நாடாளுமன்ற பொது தேர்தலிலும் மக்களுக்கு செம நோட்டு கவனிப்பு நடந்தது.

இந்த நேரத்தில் ஐந்து சட்டமன்ற இடைத்தேர்தல்கள் வரப்போகின்றது என்றதும் நாக்கில் எச்சில் ஊற மக்கள் காத்திருந்த நேரத்தில் அதில் மண் அள்ளி போடுகிற மாதிரி அதிமுக தேர்தலை புறக்கணிப்பதாக சொல்ல அ.தி.மு.க.வை தொடர்ந்து பா.ம.க. ம.தி.மு.க.வும் தேர்தலை புறக்கணிக்கிறது!

ஆளில்லாத மைதானத்துல ஓடி ஓடி கோல் போட திமுகவும் என்ன கேணையா... இந்த இடைத்தேர்தலில் நோட்டு கவனிப்பு குறையுமா? பார்க்கலாம்...

முதலாளித்துவ பயங்கரவாதம். - பு.ஜ.தொ.மு

இந்த பதிவிற்கு முதலில் வைத்த தலைப்பு வேறு... அது கடைசியில்

முதலாளித்துவ பயங்கரவாதம் பற்றிய கூட்டம் சுப. தங்கராசு, பா. விஜயகுமார், பு.ஜ.தொ.மு போன்றோர் நடத்துகிறார்கள்

நாள் : 21 ஜூலை 2009 செவ்வாய்க்கிழமை
நேரம் : மாலை 6.15 மணி
இடம் : கிழக்கு பதிப்பகம் மொட்டமாடி :-)
மேலதிக தகவல்கள் இங்கே
இந்த பதிவிற்கு முதலில் வைத்த தலைப்பு
"என்ன கொடுமை அசுரன் இது?"

சோதனை 1

சோதனை 1

சோதனை

சோதனை

தெனாலி பல்சுவை தளம் - அறிமுகம்

தெனாலி ராமன் ஒரு அதி புத்திசாலியான நகைச்சுவை தூக்கலாக சாதுரியமாக செயலாற்ற கூடிய ஒரு பல்செயல் ஆளுமை...

அந்த தெனாலி ராமன் போன்றே தெனாலி இணைய தளமும்..

தெனாலி தளம் அசத்தலான வடிவமைப்பு, சமூக சிந்தனைகளோடு கூடிய கட்டுரைகள் ஸ்பெஷல்ஸ் பகுதியில்(கண்ணீர் தேசம் போர் என்ன செய்யும், இந்தியாவிடமிருந்து சுதந்திரம் வாங்கிய 50 கிராமங்கள்! என செவிட்டில் அறையும் கட்டுரைகள்...)

தமிழ்நாடு, இந்தியா, இலங்கை, சினிமா என்ற தலைப்புகளின் கீழ் செய்திகள்...


பிரகாஷ்ராஜ் எழுதும் பெர்சனல் தொடர், திரைப்பட கேலரி , அரசியல் நையாண்டி, ரகசிய தெனாலி(கிசு கிசு??), திரை விமர்சனம் என ஒரு பல்சுவை இணைய தளத்திற்கான அத்தனை அம்சங்களுடன் கலக்கலான தெனாலி தளம்...

பொதுவாக பல்சுவை இணையதளங்கள் தினம் தினம் புதுப்பிக்கப்படாது, ஆனால் தெனாலி தளம் தினம் தினம் நிறைய புதியவைகள் பதியப்படுகின்றன...

உங்களின் படைப்புகளையும் தெனாலிக்கு அனுப்பலாம்...

ஏற்கனவே கலக்க ஆரம்பித்திருக்கும் "தெனாலி" தமிழ் இணையத்தில் ஒரு பெரிய இடத்தை பிடிக்க வாழ்த்துகள்..
http://www.thenaali.com/